டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதிகபட்சமாக ஷபாப் கான் 52 ரன்களும், இஃப்திகார் அகமது 51 ரன்களும், முகமது ஹாரிஸ் மற்றும் முகமது நவாஸ் ஆகியோர் தலா 28 ரன்களும் எடுத்தனர்.
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் இன்று சிட்னியில் அரங்கேறும் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா – பாகிஸ்தான் அணிகள் (குரூப்2) மோதின.
சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 21 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 11-ல் பாகிஸ்தானும், 10-ல் தென்ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றுள்ளன. 5 புள்ளிகளுடன் உள்ள பவுமா தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் சிக்கலின்றி அரை இறுதிக்குள் நுழைந்துவிடும். ஆனால் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி ஒரு வெற்றி (நெதர்லாந்துக்கு எதிராக), 2 தோல்வி (இந்தியா, ஜிம்பாப்வேக்கு எதிராக) என்று 2 புள்ளிகளுடன் பின்தங்கியிருக்கிறது. அந்த அணியை பொறுத்தவரை எஞ்சிய இரு ஆட்டங்களிலும் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும்.
இந்நிலையில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு தென்ஆப்பிரிக்கா – பாகிஸ்தான் அணிகள் (குரூப்2) மோதின. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்ய தொடங்கியது.
இறுதியில், 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக ஷபாப் கான் 52 ரன்களும், இஃப்திகார் அகமது 51 ரன்களும், முகமது ஹாரிஸ் மற்றும் முகமது நவாஸ் ஆகியோர் தலா 28 ரன்களும் எடுத்தனர்.
தொடர்ந்து, 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கியுள்ளது.